Thursday, April 15, 2010
உள்ளத்தின் ஓர் பிம்பம்..!!
நெடிய பிரிவுக்கு பின்தாய் விரல் இறுகப் பற்றும்மழலை போலதொலைந்து போனஎழுத்துச் சுவடுகள்தேடி வந்துவிரல் பிடித்துஉயிர்த்தெழகாத்திருக்கின்றன..தன் மழலை வாசம்தாயறிவதைப் போலஎன் எழுத்துகளின் வாசம்நானறியத் தலைப்படுகிறேன்...வெகு நாட்கள்முக்காடு இட்டுபுழுதி படிந்துஉறங்கிய சுவடுகள்அதன் மேனியெங்கும்மழலை கதக்கியபால் வாசனையை நினைவூட்டின..!மழலையால்கலைத்து போடப்பட்டவிளையாட்டு பொம்மை போலஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றனகவிக்கருக்கள்..!மறந்து போனாலும்நினைவூட்டியபடியே இருக்கின்றனஎன்றோ நட்டு வைத்த நட்புப் பூக்கள்..விடியலுக்காக ஏங்கும்குருவிக் குஞ்சின் மனதைப் போல்கவி வருகைக்காக ஏங்கித் தவிக்கும்உள்ளத்தின் ஓர் பிம்பம்..!!
Subscribe to:
Post Comments (Atom)

Nice language. Warm wishes. Nice taste.
ReplyDeleteDear Mr.Ravi. Thank you for your comments. Read daily my stories and poem and send feed back.
ReplyDelete