Adbrite

My Popularity (by popuri.us)

Friday, June 25, 2010

KAVITHAI

*********************************


அடி, உதை, குத்துக்கு…

உடம்பு வலித்தும்

உள்ளம் வலிக்கவில்லை…

பேரப்பிள்ளைகளின் செல்லம்?



*********************************

பெண் தெய்வம்

பயந்து ஓடுகிறது

எதிரே

போலிச்சாமியார்!

*********************************

அவளுடைய

இதழ்களும் குறள்தானோ?

இரண்டே வரியில்

எத்தனை பாடங்கள்…?



*********************************

அப்பா இறப்பிற்கு

சிரித்தபடி அம்மா

புகைப்படத்தில்!



*********************************

உனக்கு

கவிதை எழுத தெரியுமா

என்றாய்

தெரியாது ஆனால்

பார்த்து கொண்டிருக்கிறேன்

என்றேன்.

*********************************

அன்பே

தங்கத்திலிருந்து

வெள்ளி வருவதை

இப்பொழுதுதான் பார்க்கிறேன்

உன் வியர்வை.



*********************************

என்ன வேண்டுதலோ…

மொட்டை போட்டது மரம்

இலையுதிர் காலம்!



*********************************



அன்பு என்ற சொல்லுக்கு

அர்த்தம் கேட்டு

அடித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்.



*********************************

No comments:

Post a Comment

Invited comments from daily readers.